முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2,290 கோடியில் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் : பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

எல்லையில் சீனா அத்துமீறி வருவதால் இந்தியா ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. மேலும், விமானப்படை, கப்பற்படையையும் வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய ஆயுதப்படைக்கு 2,290 கோடி ரூபாய் அளவில் ஆயதங்கள் வாங்க செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது.  இந்த ஆயுதங்களை அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியா கொள்முதல் செய்கிறது.

கப்பற்படை மற்றும் விமானப்படைக்கு ஸ்மார்ட் எதிர்ப்பு ஏர்பீல்டு ஆயதங்களும், 780 கோடி ரூபாய் அளவில் நவீன துப்பாக்கிகளும்  வாங்க இருக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து