முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் தாயார் மரணம்: மதுரை ஆதீனம் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் நேற்று  காலை தகனம் செய்யப்பட்டது. 

அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான பேர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் சென்று முதல்வரின் தாயார் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அருமை தாயார் தவசாயி அம்மாள் காலமானார் என்ற செய்தி அறிந்தோம். இந்த நாட்டிற்காக இரவையும் பகலாக்கி உழைக்கின்ற ஒரு நல்ல தலைவனை பெற்றெடுத்த நமது முதல்வரின் தாயார் ஆன்மா சாந்தி பெற்று விண்ணுலகில் இறைவன் சன்னிதானத்தில் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து