முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமறைவான இலங்கை தாதா ஜெமினி பொன்சேகா கைது : தமிழக போலீசார் அதிரடி

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகாவை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் பிரபல டான் சுனில் ஜெனிமி பொன்சேகா, அந்நாட்டு அரசால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தியதாக தமிழக போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த பொன்சேகா, தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி, இந்திய குடிமகனுக்கான ஆவணங்களையும், போலி பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 

சென்னையில் கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருக்கிறார்.

இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பொன்சேகா, பின்னர் பெங்களூருவில் தலைமறைவானார்.

இதனையடுத்து பொன்சேகாவை பெங்களூருவில் வைத்து தமிழக கியூ பிரிவு போலீசார் அதிரடியாக  கைது செய்துள்ளனர். இன்று ஜெமினி பொன்சேகாவை தமிழக கியூ பிரிவு போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து