முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இன்று தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியாசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியாசையும் ஒட்டி பதிவாகக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் வருகிற 19-ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வ;வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனை காரணமாக மீனவர்கள் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக (கோவை) சின்னக்கல்லார்-வால்பாறை, (திருநெல்வேலி) பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் (கன்னியாகுமரி) பெருஞ்சாணி- பேச்சிப்பாறை- சித்தாறு மற்றும் தென்காசி, சோலையார் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து