முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

தேனி : தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனால் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் 128.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று ஒரு அடி உயர்ந்து 129.25 -ஆக இருந்தது.

நீர்மட்டம் உயர்ந்து வருவதையொட்டி, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 1,400 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டு திறந்துவிடப்படுகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 779 கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது.

அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 536 மில்லியன் கனஅடியாக உள்ளது.முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் மீண்டும் 4 ஜெனரேட்டர் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து