முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். 

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி  கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

முன்னதாக, மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில்  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், ஒன்றியக் குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கட்சிக் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தாங்கள் இருக்கும் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.  கட்சியில் இணைந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து