முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவோம் : வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சூளூரை

ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : வரும் சட்டசபை தேர்தலில்  அமோக வெற்றி பெற்று பொன்விழா ஆண்டை நாம் சிறப்பாக கொண்டாடுவோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார். 

அ.தி.மு.க. 49-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம், வலையங்குளம் ஆகிய பகுதிகளில் 49 அடி உயரமுள்ள கட்சிக் கொடியினை ஏற்றி எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்வி.வி. ராஜன்செல்லப்பா வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேலும் இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்ட  பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்ட துணைச் செயலாளர் சசிகலா , மாவட்ட இணைச் செயலாளர் சரோஜா, மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, மேலூர் ஒன்றிய செயலாளர் கே. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றி செழியன் , மேலூர் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.பி. முத்துகிருஷ்ணன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன், மாவட்ட, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் திருநகர் செல்வகுமார் , மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் நாகமலை புதுக்கோட்டை ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் செயலாளர் அன்பு செல்வன் ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் லட்சுமிபதி ராஜன், மதுரை மேற்கு ஒன்றியம் வாசு ,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி இணைசெயலாளர் பொன் ராஜேந்திரன், மற்றும் வக்கீல் ஈரோடு சாமி வக்கீல் காசிநாதன் துரை, சூர்யா நகர் பி புருஷோத்தமன், தேன் சுகுமாரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது, 

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்தபோது தங்கள் ரத்தத்தை சிந்தி வேர்வை சிந்தி தொண்டர்கள் உழைத்தனர். 16லட்சம் தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அம்மா உருவாக்கினார். அம்மா கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரின்  நூற்றாண்டு விழாவை அரசின் சார்பில் கொண்டாடுவோம் என்று சூளுரை ஏற்றார். அதன்படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை அரசின் சார்பில் முதல்வரும், துணை முதல்வரும் கொண்டாடினர். தற்பொழுது அ.தி.மு.க. 49 ஆண்டு தொடக்க விழாவை நாம் காண்கிறோம். அடுத்த ஆண்டு நாம் 50-ம் ஆண்டு பொன்விழாவை காண உள்ளோம். அதற்கு இப்போதே சூளுரை ஏற்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்று 50 ஆண்டு பொன் விழாவில் நமது இயக்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டாட வேண்டும் என்று நாம் சபதம் ஏற்க வேண்டும்.

1981,1991,2001,2011 ஆகிய ஆண்டுகளில் நாம் ஆட்சியைப் பிடித்தோம் அதே போல் வருகின்ற 2021-ம் ஆண்டில் நாம் ஆட்சியை நிச்சயம் பிடிப்போம். கட்சித்  தொண்டர்கள் அனைவரும் முதல்வர் மற்றும் துணை முதல்வர்  ஆகியோரின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சென்று சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அயராது நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து