எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : வரும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பொன்விழா ஆண்டை நாம் சிறப்பாக கொண்டாடுவோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
அ.தி.மு.க. 49-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம், வலையங்குளம் ஆகிய பகுதிகளில் 49 அடி உயரமுள்ள கட்சிக் கொடியினை ஏற்றி எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்வி.வி. ராஜன்செல்லப்பா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்ட பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்ட துணைச் செயலாளர் சசிகலா , மாவட்ட இணைச் செயலாளர் சரோஜா, மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, மேலூர் ஒன்றிய செயலாளர் கே. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றி செழியன் , மேலூர் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.பி. முத்துகிருஷ்ணன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன், மாவட்ட, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் திருநகர் செல்வகுமார் , மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் நாகமலை புதுக்கோட்டை ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் செயலாளர் அன்பு செல்வன் ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் லட்சுமிபதி ராஜன், மதுரை மேற்கு ஒன்றியம் வாசு ,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி இணைசெயலாளர் பொன் ராஜேந்திரன், மற்றும் வக்கீல் ஈரோடு சாமி வக்கீல் காசிநாதன் துரை, சூர்யா நகர் பி புருஷோத்தமன், தேன் சுகுமாரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது,
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்தபோது தங்கள் ரத்தத்தை சிந்தி வேர்வை சிந்தி தொண்டர்கள் உழைத்தனர். 16லட்சம் தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அம்மா உருவாக்கினார். அம்மா கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசின் சார்பில் கொண்டாடுவோம் என்று சூளுரை ஏற்றார். அதன்படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை அரசின் சார்பில் முதல்வரும், துணை முதல்வரும் கொண்டாடினர். தற்பொழுது அ.தி.மு.க. 49 ஆண்டு தொடக்க விழாவை நாம் காண்கிறோம். அடுத்த ஆண்டு நாம் 50-ம் ஆண்டு பொன்விழாவை காண உள்ளோம். அதற்கு இப்போதே சூளுரை ஏற்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்று 50 ஆண்டு பொன் விழாவில் நமது இயக்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டாட வேண்டும் என்று நாம் சபதம் ஏற்க வேண்டும்.
1981,1991,2001,2011 ஆகிய ஆண்டுகளில் நாம் ஆட்சியைப் பிடித்தோம் அதே போல் வருகின்ற 2021-ம் ஆண்டில் நாம் ஆட்சியை நிச்சயம் பிடிப்போம். கட்சித் தொண்டர்கள் அனைவரும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சென்று சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அயராது நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.