முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடியின் தாயார் திருவுருவப் படத்திற்கு கவர்னர் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை: நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தனர்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடியின் தாயாரின் திருவுருவப் படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் மலர் தூவி மரியாதை செலுத்தி முதல்வருக்கு ஆறுதலும் தெரிவித்தனர். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் உடல்நலக் குறைவால்  காலமானதையொட்டி, நேற்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர். காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் மற்றும் குடும்பத்தினர், நீதியரசர் செல்வி வேலுமணி, ஆகியோர் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 

ஸ்டாலின் மலர் அஞ்சலி:-

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்  தலைவர்  துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் க. பொன்முடி, வி. பன்னீர்செல்வம், கே.எஸ். தென்னரசு, பி. சத்யா, விருகை வி.என். ரவி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி ஆகியோரும் தவுசாயம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 

மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழிலாளர் மற்றும் லைவாடீநுப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் டாக்டர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர்  ஆ. கார்த்திக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் வி. தங்கவேலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. மைத்ரேயன், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராம ராஜா, வேல்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஐசரி கணேஷ் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நடிகர், நடிகைகள் அஞ்சலி 

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் டி. ராஜேந்தர், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை குட்டி பத்மினி, நடிகை சித்ரா, நடிகர் அப்சல், நடிகர் உதயா, நடிகை சங்கீதா, நடிகர் ரமேஷ் கண்ணா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பொருளாளர் சுவாமிநாதன், திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், இசையமைப்பாளர் தீனா ஆகியோரும் நேரில் சென்று, தவுசாயம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆறுதல் கூறினார்கள்.

மாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதல்வரின் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முதல்வருக்கு ஆறுதலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து