முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி: முதல்வர் எடப்பாடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், “தெலுங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து