முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபிடனை கிரிமினல் என அழைத்த டொனால்டு டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பிடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 

அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட ராய்டர்ஸ் செய்தியாளர் ஜெப் மேசனை ஒரு கிரிமினல் என்று வசை பாடிய டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பிடனும் ஒரு கிரிமினல் என்றும் தெரிவித்தார். 

நீங்கள் ஒரு குற்றவாளி [புகாரளிக்கவில்லை]. நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், ஜோ பிடன் ஒரு குற்றவாளி, அவர் நீண்ட காலமாக ஒரு குற்றவாளியாக இருக்கிறார்,

அதைப் புகாரளிக்காததற்காக நீங்கள் ஒரு குற்றவாளி மற்றும் உங்கள் ஊடகமாகும். அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம். ஒரு நல்ல நேரம் கிடைக்கும் என கூறினார். மேலும் அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி மற்றும் பிற நிபுணர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து