முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை போற்றுகிறேன்: வீரவணக்க நாளையொட்டி முதல்வர் எடப்பாடி வாழ்த்து

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காவலர் வீரவணக்க நாளையொட்டி, அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை போற்றுவதாக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர். அதன்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, 

சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து