முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.5 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

முன்னதாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத  உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று கவர்னர் விளக்கமளித்திருந்தார்.  இந்த நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு கவர்னருக்கு  அழுத்தம் கொடுத்தோம். ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது. ஒரு அறைக்குள் நடந்த விவாதத்தை வெளியில் சொல்ல முடியாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத  உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும்.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது. வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். அது தொடர்பாக அரசு முடிவெடுக்கும்  என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து