முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி: துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்ததற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் விருதுநகர் - எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட எதிர்பாரா வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.  

மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து