முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் மீண்டும் மின்சார ரயில் சேவையினை துவங்க தெற்கு ரயில்வேவுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கடிதம் அனுப்பி உள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

தெற்கு ரயில்வே மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.  இதே போல் பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிக்கும் வகையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் சென்னை மற்றும்  பொதுமக்களின் மாநில அரசு ஏற்கனவே மின்சார ரயில், நகர்புற ரயில் சேவையினை மீண்டும் துவங்குவதற்கு 2.9.2020 அன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சார ரயில் மற்றும் நகர்புற ரயில் சேவை துவங்குவது பொதுமக்களுக்கு பெரிதும் உதவும், வேகமாக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் உதவும்.  எனவே சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சார ரயில் மற்றும் நகர்புற ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க  தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் கொரோனா தொற்றுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் ரயில் சேவை இயங்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ரயில்சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து