முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் பிரான்சு அதிபர் செயல்படுகிறார் : இம்ரான்கான் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லமபாத் : முகம்மது நபி குறித்து கேலி சித்திரங்களை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவாகவும் இஸ்லாமியர்களை விமர்சித்தும்  பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் இம்மானுவேல் மேக்ரான் நடந்து கொள்வதாக இம்ரான் கான் விமர்சித்துள்ளார். 

இதற்கிடையே, இம்மானுவேல் கருத்துக்கு துருக்கியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரபு நாடுகளும் கடும் எதிர்வினையாற்றியுள்ளன. பிரான்சு நாட்டு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குவைத், ஜோர்டான், கத்தார் ஆகிய நகரங்களில் உள்ள கடைகளில் பிரான்சு பொருட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 

பிரான்சு பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் மத்திய கிழக்கு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக லிபியா, காசா முனை உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து