எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் முதல்வரின் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றி ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அம்மாவின் நல்லாசியுடன் சரித்திரம் போற்றும் சாதனை படைக்கும் வகையில் எளிய முதல்வராய், விண்ணை முட்டும் சாதனை படைத்திட்டு, எட்டரை கோடி மக்கள் நலனே, தன் நலன் என்று சாதனை படைத்திட்ட சாதனை நாயகன், தன் அளப்பறியா உழைப்பால் உலகமே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரத பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடியார், இந்த சாதனை திட்டங்களுக்கு துணையாக நின்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். திகழ்ந்து வருகிறார் என்பதை மாநில அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் பெருமையுடன் சுட்டிகாட்டிகிறது.
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை தாங்கள் சுவாசிக்கும் மூச்சாக நினைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் முதல்வரும், துணை முதல்வரும் செயலாற்றி வருவதை இந்த நாடு நன்கு அறியும் தென்மாவட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கித் தந்தது மட்டுமல்லாது, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரியை உருவாக்கி தந்தும், மதுரை மாநகர் பகுதிக்கு 1,200 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணியினை தந்திட்டது மட்டுமல்லாது, மதுரை மாவட்டத்திற்கு 30 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களையெல்லாம் மூன்றே ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்களை தந்திட்டுள்ளார் நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செய்து அதன் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீரை உயர் செய்து வாழும கரிகால சோழனாக முதல்வர் திகழ்ந்து வருகிறார்
தொடர்ந்து தென்மாவட்ட மக்களின்,வளர்ச்சிக்காக கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி அள்ளி வழங்கி வரும் முதல்வர் இரண்டு நாள் பயணமாக தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கிறார். 29-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கை ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்கிறார் முதல்வர்.
அதனை தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் மதுரை, மாவட்டத்திற்கு வருகை தந்து பசும்பொன் தேவர் திருமகனார் குருபூஜையில் பங்கேற்க வருகின்ற 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட மக்களின் நன்றியை உரிதாக்கும் வகையிலும், இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிக முதலீட்டை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாகி தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாரதப் பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாநில அம்மா பேரவையின் சார்பிலும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சாதனைத் திட்டங்களை முன்னிறுத்தி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி வாகை சூடிடும் என்று எதிர்க்கட்சிகளே புறமுதுகிட்டு ஓடிடும் வகையில் வகையில் மாபெரும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,
தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என்று நடிகர் கமல் கருத்து கூறியுள்ளார். வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன் கூட்டியே ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் வெள்ளம் வரும் முன், வெள்ளம் வரும்போதும் , வெள்ளம் நீர் வடிந்த பின்பு என்று மூன்று நிலைகளைப் பிரித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் நீர் தேங்கும் பகுதிகளில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காணொலி முலம் அறிக்கை வெளியிடுவதை விட களத்தில் வந்து பார்க்கவேண்டும். அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளன. எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்பது போல வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள்.
தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது எந்த வகையிலாவது குறை சொல்ல வேண்டும் என குறை கூறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என காத்திருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். எந்த வேலையும் செய்யாமல் பங்களிப்பில் எங்களுக்கும் உள்ளது என்று தி.மு.க. செய்து வருகின்றனர். பெற்ற பிள்ளைக்கு தான் பெயர் வைக்க முடியும். பெறாத பிள்ளைக்கு எப்படி பெயர் வைக்க முடியும். அப்படித்தான் தி.மு.க.வின் நிலைப்பாடாகும்
அதிமுக அரசு மீது மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. டி.ஜி.பி. விவகாரத்தில் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் காரணங்களை விமர்சனம் செய்யக்கூடாது. வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அ.தி.மு.க.வில் பதவி தருவது கிடையாது.
அதிகமான இளைஞர்களை சட்டப்பேரவையில் கொண்டது அ.தி.மு.க. மட்டுமே, இளைஞர்களுக்கு அட்சய பாத்திரம் போல் அள்ளி அள்ளி வாய்ப்புகளை தருகிற ஒரே இயக்கமாக உள்ளது. அம்மாவிற்கு பிறகு அ.தி.மு.க. எஃகு கோட்டையாக உள்ளது. கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. நடிகர் விஜய் எல்லாம் மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க உரிமையுள்ளது. அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல,
நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதில் அதைத் தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை, பத்தாண்டு காலமாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு தி.மு.க.வினர் உள்ளனர் எனவும் திமுகவின் காட்டு தர்பார் குடும்ப அதிகார மையம் அதிகார குறுக்கீடு அதிகார துஷ்பிரயோகம் நில அபகரிப்பு சட்டம் ஒழுங்கு சீரழிவு மின்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளது. வருகின்ற 29 மற்றும் 30 தேதிகளில் தென் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளார் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த