முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியினர் 14 நாள்கள் தனிமைப் படுத்தப்படுவர் - பிசிசிஐ தலைவர் கங்குலி

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட  செல்லும் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் அங்கு 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர் என்று பிசிசிஐ  தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது இந்திய அணியினர்  விளையாடுகின்றனர்.  இந்நிலையில் கங்குலி அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்த மாதம் பயணிக்கவுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் தங்கியிருக்கையில் வெளிநபர்களோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்து இருக்க வலுவான ஏற்பாடுகளை செய்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்திய அணியினருடன் குடும்பத்தினர் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து