முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மலரஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தனது பாதுகாவலர்களாலேயே சுட்டு கொல்லப்பட்ட அவரது நினைவு தினத்தினை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்திரா காந்தியின் பேத்தியும், காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து