முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்தனர் : சுகாதார துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,24,522-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,24,522 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,91,236 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 3,848 பேர் குணமடைந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 690 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 199916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 99,56,210 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 70,767 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 202 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 22,164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,37,290 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 1,507 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,87,200 பேர் பெண்கள். நேற்று  மட்டும் 1,004 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. 

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து