முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில் பீகார் தேர்தலில் பா.ஜ.க. வென்றால் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.

பா.ஜ.க.வின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை சந்தித்தது. இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட மாட்டாது என்று தெரிவித்தது. 

இந்நிலையில் நேற்று இது குறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், 

இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் ஒரு கிளை அமைப்பு போல செயல்படுகிறது. எனவே அவர்களிடமிருந்து நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் சமயத்தில் பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்க்கின்றனர். அப்படியிருந்தாலும் தேர்தல் ஆணையம் வெளிப்படையானது என்று மக்கள் இன்னமும் நம்புகின்றனர் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து