முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இனி அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. விசாரிக்க முடியாது : அமைச்சரவையில் முடிவு

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : நாடு முழுவதும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், கேரளாவில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ. இனி புதிதாக வழக்குகளை பதிவு செய்யவோ, விசாரிக்கவோ முடியது. 

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் சி.பி.ஐ. விசாரணைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து