முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலை குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றியும் பிரதமரிடம் கவர்னர் விளக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதே போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை செயலாளரையும் சந்திக்க கவர்னர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து