முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே பிராணா - பிபாஜ் சாலையில் உள்ள கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தற்போதைய தகவல்களின்படி, இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை 14 பேர் இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது என்று மூத்த தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து அகமதாபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோவுனில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பை அறிந்து வேதனை அடைந்தேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து