முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரடோனாவுக்கு மூளையில் ரத்தக்கட்டி வெற்றிகரமான அகற்றம் டாக்டர்கள் தகவல்

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அர்ஜென்டினாய : பிரபல கால்பந்து வீரர் மரடோனா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அர்ஜென்டினாவில் உள்ள லா பிளேடாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் கொரோனா தொற்று பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கோல் டாட் காம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் மரடோனாவுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனை அவரது தனிப்பட்ட மருத்துவர் செவ்வாயன்று உறுதிப்படுத்தினார். 

மேலும் அவர் " நாள்பட்ட சப்டுரல் ஹீமாடோமா (ரத்தகட்டி ) வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவர் லியோபோல்டோ லூக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து