முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை காரணம் காட்டி பட்டாசு வெடிக்க கர்நாடகம் தடை

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கொரோனா வைரஸ் பரவல் மற்றும் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பட்டாசுகளுக்கு தடை விதித்து டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன.

அந்த வரிசையில் பா.ஜ.க. ஆளும் கர்நாடகமும் இணைந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பட்டாசுகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியிருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இந்த தீபாவளியில் பட்டாசுகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்ததாகவும் கூறிய எடியூரப்பா இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அரியானாவில் குறிப்பிட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பது விற்பனை செய்வது சட்டவிரோதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து