முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் தேர்தல் பணியில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

முசாபர்பூர்  பீகார் சட்டசபை தேர்தல் பணியில் உயிரிழந்த தேர்தல் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

முசாபர்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கமல் சிங் கூறும் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

நீர்பாசன துறையை சேர்ந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  விதிகளின்படி, உயிரிழந்த தேர்தல் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து