முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

அரியானா : அரியானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.  

இதையடுத்து அரியானாவில் சில நாட்களுக்கு முன்னர் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அங்கு பண்டிகை காலம் முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கி உள்ளனர். 

இந்நிலையில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள் பள்ளி ஒன்றில் பயிலும் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ரேவாரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து