முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் புகழஞ்சலி: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 103-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று(நேற்று) அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திரா காந்தி அவர்களுக்கு எனது புகழஞ்சலிகள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோர் இந்திரா காந்தியின்  நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து