முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு அருகே நடந்த என்கவுண்டர்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நக்ரோட்டா என்கவுண்டர் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா மற்றும் உளவுத்துறையின் உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டார்

ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினருக்கும், லாரியில் பதுங்கியபடி வந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், மும்பை தாக்குதல் போன்று மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், நக்ரோட்டா என்கவுண்டர் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா மற்றும் உளவுத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.   

மும்பை தாக்குதலின் நினைவு நாளில் (நவம்பர் 26), பயங்கரவாதிகள் ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என்று ஜம்மு பிராந்திய ஐ.ஜி. கூறியிருந்தார்.  எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் வரும் 28-ம் தேதி  முதல் டிசம்பர் 19 வரை எட்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து