முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜய் சின்கா தேர்வு

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகார் சட்டசபை சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜய் சின்கா தேர்வு செய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலை இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் குமார் சின்காவும், மெகா கூட்டணி சார்பில் அவாத் பிகாரி சவுத்ரியும் போட்டியிட்டனர். 

வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலவை உறுப்பினர்கள் அவையில் இருந்ததை காரணம் காட்டி, குரல் வாக்கெடுப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேறு அவையைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என விதிமுறை புத்தகத்தை காட்டி முழக்கங்கள் எழுப்பினர். விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தினார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. 

மற்ற சபையைச் சேர்ந்தவர்கள் சபாநாயகர் தேர்தலுக்கு வாக்களிக்கவில்லை ஆனால் அவர்கள் இந்த அவையில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி தெரிவித்தார். 

அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பா.ஜ.க. வேட்பாளர் விஜய் குமார் சின்கா 126 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மெகா கூட்டணி வேட்பாளர் அவாத் பிகாரி சவுத்ரி 114 வாக்குகள் பெற்றார். 

சட்டசபையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 உறுப்பினர்கள் உள்ளனர். ஆர்.ஜே.டி. தலைமையிலான மெகா கூட்டணிக்கு 110 பேரும், ஒவைசி கட்சிக்கு 5 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து