எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) சிட்னியில் நடக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது இடது பின்தொடையில் தசைநார் கிழிந்து காயமடைந்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதற்கு முன்பாக உடல்தகுதியை நிரூபிப்பதற்கு அறிவுறுத்தப்பட்ட ரோகித் சர்மா சில தினங்களாக உடல்தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் டாக்டர்கள், பயிற்சியாளர்கள் முன்னிலையில் மேற்கொண்டு வருகிறார்.
இதே போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் ஐ.பி.எல். தொடரின் போது வயிற்றின் அடிப்பகுதியில் காயத்தில் சிக்கினார். டெஸ்ட் அணியில் அங்கம் வகிக்கும் அவரும் காயத்தில் இருந்து மீண்டு உடல்தகுதியை அடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் இப்போதைக்கு இருவரும் முற்றிலும் குணமடைந்து உடல்தகுதியை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் புத்துணர்ச்சியுடன் முழு உடல்தகுதியை எட்டுவதற்கு 3 அல்லது 4 வாரங்கள் ஆகும் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு அனேகமாக டிசம்பர் 2-வது அல்லது 3-வது வாரம் ஆகிவிடும் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ரோகித், இஷாந்த் ஷர்மா அங்கு செல்லும் போது இந்த தனிமைப்படுத்துதலை முடித்த பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். அதனால் அடிலெய்டு (டிசம்பர் 17-21), மெல்போர்ன் (டிச.26-30) ஆகிய இடங்களில் நடக்கும் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் நிச்சயம் விளையாட முடியாது.
அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் (சிட்னியில் ஜன.7-11, பிரிஸ்பேனில் ஜன.15-19) பங்கேற்பதும் சந்தேகமாகியுள்ளது. தனிமைப்படுத்துதல் முடிந்து குறைந்தது ஒரு வாரமாவது பயிற்சியில் ஈடுபட்டால் தான் ஆஸ்திரேலிய சூழலுக்கு ஏற்ப தயாராக முடியும். தற்போது இந்திய அணி வீரர்களுக்கு தனிமைப்படுத்துதலின் போதே பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.
அதே போன்ற சலுகை ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மாவுக்கும் கிடைத்தால் கடைசி இரு டெஸ்டில் கால்பதிக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே விராட் கோலி முதலாவது டெஸ்டுடன் குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்ப உள்ள நிலையில் ரோகித் சர்மாவுக்கு உருவாகியுள்ள சிக்கல் இந்தியாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
நிலைமையை சமாளிக்க ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் அணியில் கூடுதலாக சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
32 வயதான இஷாந்த் ஷர்மா இதுவரை 97 டெஸ்டில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் போது 100-வது டெஸ்ட் மைல்கல்லை எட்ட காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ‘20 ஓவர் போட்டிக்கு இஷாந்த் ஷர்மா தயாராக வேண்டியதாக இருந்தால் அதில் வெறும் 4 ஓவர்கள் தான் பந்து வீச வேண்டும். அந்த வடிவிலான போட்டி என்றால் பிரச்சினை இல்லை. டெஸ்ட் போட்டிக்கு நிறைய ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதற்கு ஏற்ப உடல்தகுதியை எட்ட வேண்டும் என்றால் மேலும் சில வாரங்கள் ஆகும்’ என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மாற்று வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் கார்த்திக் தியாகி, கம்லேஷ் நாகர் கோட்டி, இஷான் போரெல் இடம் பிடித்துள்ளனர். தேவைப்பட்டால் இந்த 3 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.