முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புயல் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னையில் புயல் பாதித்த வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் ஆய்வு செய்தார். தண்ணீரில் நடந்து சென்று அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நிவர் புயல் நேற்று அதிகாலை வரை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. 

நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து