முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 1,442 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,77,616-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,77,616ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,54,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,494 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,681ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 392 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 2,14,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,18,64,177 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 61,610 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 220 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து