முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியினை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்படுகிறது. 

மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த போதிலும் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் முடிக்கப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் கடந்த மாதம் (நவம்பர்) 12-ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதித்த போதிலும் கொரோனோ சூழலை கருதி முடிவு கைவிடப்பட்டது.

இந்த நிலையில் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் இன்று முதல் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதித்துள்ளது.

தனிநபர் இடைவெளி, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் 7-ம் தேதி முதல் நேரடி வகுப்பு நடத்தப்படவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து