எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைப்பதற்காக நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை வருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மதுரை வருகி்றார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இயற்கையை கையாள்வதில் புதிய இலக்கணம் படைத்திருக்கிறார் தமிழக முதல்வர். நீர் மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்தி, நீர் மேலாண்மையில் இந்திய தேசத்தில் தாய் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிற ஒரு வரலாற்றுச் சிறப்பினை பெற்றுத் தந்திருக்கிறார். நீர் நிலைகளை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்ததன் காரணமாக, கடந்து சென்ற நிவர் புயலினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
தற்போது உருவாகியுள்ள “புரவி” புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
முதல்வரின் உத்தரவின்படி பேரிடர் மேலாண்மைத் துறை, மாநில கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். இப்புயலானது கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் உள்ள 14,144 பாசன ஏரிகளில் 2,692 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கடலோர மாவட்டங்களில் உள்ள 7,378 ஏரிகளில் 1,579 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், இரமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 7,075 ஏரிகளில் 979 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 100 சதவிகிதம் கொள்ளளவை எட்டியுள்ள ஏரிகளிலிருந்து உபரி நீரை வெளியேற்றுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்களுக்கு உரிய உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வரின் தொடர் நடவடிக்கையின் காரணமாக, மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து மண்டல குழுக்களில் பங்கேற்று நிவாரண முகாம்களில்; பணியாற்ற உள்ளனர். பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை பங்கேற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. “புரவி” புயலினால் மதுரை மாவட்டம் வரை மழை இருக்கும் என செயற்கைக் கோள் வரைபடம் தெரிவிக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வரின் உத்தரவிற்கிணங்க, வேளாண்மைத் துறை செயலாளரின் அறிவுரைகளைப் பின்பற்றி பயிர்சேதமில்லாமல் தென்னந்தோப்புகள் மற்றும் வாழைத் தோப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கள் அதிகமாக இருப்பதனால் அவற்றை பாதுகாப்பது குறித்த அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 சதவிகிதம் பயிர்க் காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைத்திருக்க உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அனைத்து துறை செயலர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் களத்திலிருக்கிறார்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1916-ம் ஆண்டு கட்டப்பட்டு ஏறத்தாழ 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும். இவ்வலுவலகம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென் தமிழகத்தின் தலைமையிடமாக கருதப்படும் மதுரையில் அனைத்து துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக பேரவை விதி 110-ன் கீழ் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக கட்டடம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கட்டடமாக, முதல்வரால் நேரில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரும் 4-ம் தேதி அன்று தமிழக முதல்வர் நேரிலே வருகை தந்து மதுரையினுடைய வெள்ளை மாளிகையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.
மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்காணும் பொருட்டு, முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வரும் ரூ.1,295.76 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 69 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வர் தாய்த் தமிழ்நாட்டில் முதன் முதலாக மைசூர் மற்றும் வாரனாசியைப் போன்று மதுரை விமான நிலைய ஓடுதளப் பாதையை (UNDER PASS)முறையில் நீட்டிப்பதற்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தமிழக முதல்வர் மதுரை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். மதுரை மாவட்ட மக்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.