எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் வருகிற 16-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தகட்டமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தி பார்க்கப்பட்டது. அதன் பிறகு 2-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 226 இடங்களில் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், இட வசதிகள் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்தல் சமயத்தில் கியூவில் வந்து முறைப்படி பதிவு செய்து ஓட்டு போடுவதுபோல் தடுப்பூசி போட வருபவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
சென்னையில் தடுப்பூசி போடும் பணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் வந்து பார்வையிட்டார். சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று கொரோனா தடுப்பூசிக்கான ஆயத்த பணிகளை ஆய்வு செய்தார். சென்னை பெரிய மேட்டில் உள்ள மத்திய அரசு மருந்து சேமிப்பு கிடங்கையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில் தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசும் மத்திய சுகாதாரத்துறைக்கு விரிவாக அறிக்கை அளித்து இருந்தது. தற்போது இந்த ஒத்திகையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் வருகிற 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை ‘கோ-வின்’ இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருப்பது குறித்தும், தடுப்பூசிகளின் தயார் நிலை குறித்தும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் உயர் மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி போடுவதற்கு செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை அதிகாரிகள் விளக்கி கூறினர். ஒரே சமயத்தில் நாடு முழுவதும் இதற்காக நடத்தி முடிக்கப்பட்ட ஒத்திகை திருப்தியாக இருப்பதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சுகாதாரத்துறையின் இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார்.
தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலமாக உள்ளது. வடநாட்டில் மகா சங்கராந்தி, பொங்கல் பண்டிகை, லோரி, மாக்பிகு ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வருகிற 16-ம் தேதி முதல் தடுப்பூசியை தொடங்குவது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மைல்கல் நடவடிக்கை ஒன்றை வருகிற 16-ம் தேதி இந்தியா மேற்கொள்கிறது. நாடுமுழுவதும் அன்றைய தினம் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் துணிச்சல் மிகுந்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்குவது தொடர்பாக இன்று மாலை மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற விவரங்கள் எடுத்துரைக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தமிழகத்தில் 226 இடங்களில் நடந்து முடிந்தது. இந்த ஒத்திகையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை முழு திருப்தியை கொண்டுள்ளது. தமிழக மருந்து சேவை கழகம் மூலம் ஏற்கனவே 33 லட்சம் சிருஞ்சுகள், ஊசிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக கொரோனா தடுப்பு மருந்து விமானம் மூலம் எப்போது வரும் என்ற தகவலை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். இந்த மருந்து வந்ததும் சென்னையில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் அதை உடனுக்குடன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் வசதிகள் உள்ளன. 2-ம் கட்டமாக மாவட்ட அளவில் 2,880 இடங்களிலும் சேமித்து வைப்பதற்கு குளிர்சாதன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கடை கோடி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய கூலர் பெட்டிகளும் தயார் நிலையில் உள்ளது.
தடுப்பூசி போடுவதற்கு 46 ஆயிரம் இடங்களை கண்டறிந்த போதிலும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தான் இந்த மருந்தை செலுத்த இருக்கிறோம். எனவே ஒரே சமயத்தில் அத்தனை இடங்களிலும் தடுப்பூசி போடப்படாது. இதுவரை 226 இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை முடிந்துள்ளது.
தமிழகத்தில் 300 முதல் 500 இடங்களில் தடுப்பூசியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் யார்-யார்? முன் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்படும். யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்பட மாட்டாது.
இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தான் போலியோ சொட்டு மருந்து முகாமை தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. பிரதமர் மோடி இன்று மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு பிறகு கொரோனா தடுப்பூசிக்கான மேலும் பல வழிமுறைகள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் அவர் மதுரையில் இருப்பதால் அங்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காங்கிரசுக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை: என் இறுதி ஊர்வலத்துக்கு வாருங்கள்: கார்கே உருக்கம்
25 Apr 2024பெங்களுரு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்ச
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n