முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து