முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019-20 ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் கால அவகாசம் நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 2019-20 ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

கடந்த 2019-20 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக காலக்கெடு இருமுறை நீட்டிக்கப்பட்டு 2021-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து நேற்றுடன் காலக்கெடு முடவடைந்த நிலையில் தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த அபராதத் தொகை 5 ஆயிரமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து