எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா என்பது தென் மாவட்டங்களில் உள்ள மாடுபிடி வீரர்களும், காளையை வளர்ப்பவர்களும் இதில் பங்கு பெறுவதை தங்களின் கௌரவமாக கருதுவார்கள். கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்த ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனது. அப்பொழுது ஒட்டுமொத்த மக்களும் திரண்டு மிகப்பெரிய போராட்டம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசு மத்திய அரசுடன் போராடி வலியுறுத்தி இழந்த உரிமையை மீட்டுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து 16.1.2018 அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முதல்வரும், துணை முதல்வரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தற்போது இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் வருகின்ற 16-ம் தேதி ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க அவர்கள் வருகை தருகின்றனர் இதனைத் தொடர்ந்து முதல்வரையும், துணை முதல்வரையும் வரவேற்க இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் இளைஞர்களும் ,விவசாயிகளும், ஊர் பெரியவர்களும் அணிதிரண்டு வரவேற்க தயாராக உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான பந்தகால் நடும் விழா அலங்காநல்லூரில் உள்ள ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் நடைபெற்றது
இந்த பந்தக்கால் பணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே மாணிக்கம், காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி , வருவாய் கோட்டாட்சியர்.முருகானந்தம் , உதவி இயக்குநர் பேரூராட்சிகள் .சேதுராமன் , உதவி இயக்குநர் ஊராட்சிகள் .செல்லதுரை , வட்டாட்சியர் பழனிக்குமார் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் கழகச் செயலாளர்கள் அழகுராஜா, குமார் உட்படபலர் கலந்து கொண்டனர் .
அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:-
தாய் தமிழ்நாட்டின் தமிழ் சமுதாயத்தினுடைய வீரத்தின் அடையாளமாக , பாரம்பரியத்தின் அடையாளமாக மற்றும் பண்பாட்டின் அடையாளமாக இருக்கின்ற உலகப்புகழ் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்க வருகை தரவுள்ளார்கள் .
இந்தியாவில் இதுவரை நிகழ்ந்திராத தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ .2500 ரொக்கம் , ஒரு முழுநீள கரும்பு , வேட்டி , சேலை , அரிசி , சர்க்கரை , முந்திரி , உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி வரலாற்றை படைத்திருக்கிறார் முதலமைச்சர் .
அவனியாபுரம் , பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது அதைத் தொடர்ந்து இந்த மூன்று பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தங்களது நன்றியினை தெரிவித்து முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் அழைப்புதழ்களை வழங்கினர். அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கடந்த 2 ஆண்டை போலவே இந்தாண்டும் கழக அம்மா பேரவை சார்பில் முதலமைச்சரின் பெயரில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாகவும், சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் பெயரில் ஒரு கார் பரிசாகவும் வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் , தமிழ்ச் சமுதாயமும், விவசாய பெருமக்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சரையும் வரவேற்க தயாராக உள்ளது . காலை 8.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது துவக்கி வைக்கப்படும் . மாவட்ட நிர்வாகம் , காவல்துறை , மக்கள் நல்வாழ்வுத்துறை , கால்நடைத்துறை , பொதுபணித்துறை , உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன . மருத்துவ தகுதியின் அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 430 வீரர்களும் , பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 651 வீரர்களும் , அலங்காநல்லூ ஜல்லிக்கட்டில் பங்கேற்க 655 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாடிவாசல் முதல் காளைகள் சேகரிக்கும் இடம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது . குடிநீர் வசதி , கழிப்பறை வசதி , வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன . இவ்வருடம் தனிமனித இடைவெளியோடு பார்வையாளர்கள் இருக்கைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது
ஜல்லிகட்டு நேரத்தில் மழை பெய்தாலும் கூட காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்அயல்நாட்டு பயணிகள் வருவார்களா என்பது தெரியவில்லை வைரஸ் தொற்று இருக்கிற காரணத்தினால் தை மாதம் அல்ல மாசி பிறந்தாலும் பங்குனி பிறந்தாலும் எந்த மாதம் பிறந்தாலும் தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும் நல்லவழி பிறக்காது. தற்போதைய அரசே தொடரும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை மக்களும் அதற்கு தயாராக உள்ளனர் .
திட்டங்களை தமிழகத்திற்கு தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார் இங்கு தடையின்றி மின்சாரம் கொடுத்து வருகிறோம்அத்தனை திட்டங்களையும் மறைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள் ஆனால் அது முடியவே முடியாது நீர் நிலைகள் நிரம்பி உள்ளது அதற்கு முக்கிய காரணம் குடிமராமத்து பணிகள்சிறந்த நிர்வாகம் என்று உள்துறை அமைச்சரே சொல்லியுள்ளார்
கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் திமுகவினர் கேடு நினைக்கிறார்கள் அவர்கள் கெட்டுப் போவார்கள் நாங்கள் நல்லதை நினைப்போம் நல்லாவே இருப்போம் மன நோயாளி போல உதயநிதி ஸ்டாலின் புலம்பிக் கொண்டே இருக்கிறார். அவர் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் அது நிச்சயமாக கண்டிக்கத்தக்கதாகும். மேடை நாகரீகம் மைக்கில் பேசும் போது நாகரீகம் என்பது தெரிந்திருக்க வேண்டும். உத்தம புத்திரன் போல உதயநிதி ஸ்டாலின் பேச வேண்டாம் அரசியல் சாக்கடை என்பதே உங்களது குடும்பம் தான். உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது என்று கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு