முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16-ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்காக 'கோவிஷீல்டு', 'கோவேக்சின்' ஆகிய 2 தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கொரோனா நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடுவதற்காக மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

மேலும் கொரோனா தடுப்பூசி போடும்போது மாநில அரசுகள் கையாள வேண்டிய வழிமுறைகள், தடுப்பூசி விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து