முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் வரும் ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள் கொண்ட பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7  நாடுகள் கொண்ட ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஜி7 மாநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.   

ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வர உள்ளதாக கூறியுள்ளார். உலகின் மருந்தகம் என்ற வகையில், இந்தியா ஏற்கனவே உலகின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதாகவும் தொற்றுநோய்க் காலத்தில் பிரிட்டனும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டதாகவும் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து