எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட்டானது.
தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தாகூர் 2 விக்கெட்டையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (8 ரன்), கேப்டன் அஜிங்யா ரஹானே (2 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியை விட 33 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 ஓவரில் 21 ரன் அடித்தது. வார்னர் 22 பந்துகளில் 22 ரன்களும், மார்கஸ் 14 பந்துகளில் 1 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்க்கஸ் ஹாரிஸும் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினர். 24.6 ஓவரில் 82 பந்துகளில் 38 ரன் அடித்த மார்க்கஸ் தாகூர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து 25.6 ஓவரில் 75 பந்துகளில் 48 ரன் அடித்த வார்னர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய மார்னஸ், ஸ்டீவ் சுமித் ஆகியோர் இணைந்து ரன் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அந்த கூட்டணியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 303வது ஓவரில் 22 பந்துகளில் 25 ரன் அடித்த மார்னஸ் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன் பின்னர் களம் இறங்கிய மேத்யூ வேட் அதே ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய கேம்ரூன் ஸ்டீவ் சுமித்துடன் இணைந்து ரன் அடிக்க முயன்றார். 54.2 ஓவரில் 74 பந்துகளில் 55 ரன் எடுத்த ஸ்டீவ் சுமித் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து கேப்டன் டிம் பெயின் களம் இறங்கினார்.
60.5வது ஓவரில் 90 பந்துகளில் 37 ரன்கள் அடித்த கேம்ரூன் தாக்கூர் பந்துவீச்சிலும் அவரைத் தொடர்ந்து 64.6வது ஓவரில் 37 பந்துகளில் 27 ரன்கள் அடித்த கேப்டன் டிம்பெயின் அவட்டாகி வெளியேற பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இணைந்து ரன் எடுக்க முயன்றனர். 66.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புகள் 243 ரன்கள் அடித்திருந்தது. சிராஜ், தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பேட் கம்மின்ஸ் 16 பந்துகளில் 2 ரன்களும், ஸ்டார்க் ஒரு பந்தில் ஒரு ரன்னும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தநிலையில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. 67.3வது ஓவரில் 4 பந்துகளில் 1 ரன் அடித்த ஸ்டார்க் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய நாதன் லயன் 10 பந்துகளில் 13 ரன் அடித்த நிலையில் தாக்கூர் பந்து வீச்சிலும், ஹேசில்வுட் 11 பந்துகளில் 9 ரன்களில் அடித்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 75.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் அடித்தது. பேட் கம்மின்ஸ் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வீரர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களும், 2-வது இன்னிங்சில் 294 ரன்களும் அடித்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் அடித்து 33 ரன் பின் தங்கிய நிலையில் இருந்தது. தற்போது இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் 1–1 என்ற இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் 2வது இன்னிங்சில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுமா? அல்லது டிரா செய்ய முயற்சி செய்யுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். 1.5 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 10 பந்துகளில் 5 ரன்களும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.