முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

543 பேருக்கு மட்டுமே தொற்று: தமிழகத்தில் வெகுவாக குறைந்தது : கொரோனா பாதிப்பு: சுகாதார துறை

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,31,866) 8 லட்சத்து 31 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,31,866 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 772 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம் மொத்தம் 8,14,098 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,281ஆக உயர்ந்துள்ளது.  அரசு மருத்துவமனையில் 3,  தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 158 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 2,29,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 1,53,31,269 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 51,461 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 5,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து