முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்: உத்தவ் தாக்கரே பங்கேற்பு

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்க இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநில மந்திரியுமான நவாப் மாலிக் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- மும்பையில் சில விவசாய அமைப்புகள் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை போராட்டம் நடத்த உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.

25-ந்தேதி ஆசாத் மைதானில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் எங்களது கட்சி தலைவர் சரத்பவார் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கிறார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் எங்களது கூட்டணி கட்சி தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து