Idhayam Matrimony

இஸ்லாமியர்களின் தொழுகைக்காக சிறிது நேரம் பிரச்சாரத்தை நிறுத்திய முதல்வரின் செயலுக்கு பாராட்டு

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஸ்ரீபெரும்புதூர் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவகத்திற்கு சென்று அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அண்ணாவின்  வாழ்கை வரலாற்று தொகுப்புகள் அடங்கிய புகைப்படத்தினை பார்வையிட்டார். 

பின்பு, காஞ்சிபுரத்தில் முதல்வர் பிரச்சார வாகனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சரியாக ஒரு மணிக்கு இஸ்லாமிய பெருமக்கள் தர்காவில் தொழுகை மேற்கொண்டதை அறிந்து முதல்வர்  ஐந்து நிமிடங்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி இஸ்லாமிய பெருமக்கள் தொழுகை முடித்தவுடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதை கண்ட பொது மக்கள் முதல்வரின்  செயலை வெகுவாக பாராட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து