முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு; உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும், இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக உதயநிதி ஸ்டாலின் ரூ. ஒரு  கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக்கூறி, பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து