முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் தனியார் நிறுவனத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை: துப்பாக்கி முனையில் மர்ம நபர்களை கைவரிசை

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஓசூர் : ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உட்பட 4  பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக தனியார் நிறுவனத்தின் மேலாளர் போலீசில் புகார் அளித்தார். 

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனியார்  நிறுவனத்தின் சி.சி.டி.வி. கேமராக்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். நேற்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து