முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்: தயக்கம் வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி கடந்த 16-ம் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது.   தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.   

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.   தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக் கொண்டேன்.   

கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர்.  மாணவர்கள், குழந்தைகளை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கவில்லை. பெண்களை குறைவாக பாதித்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து