முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.150 கோடி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

சென்னை, நுங்கம்பாக்கம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்டு நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கம், மேற்குமாட வீதியில் அமைந்துள்ளது, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில். கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள, 15 கிரவுண்ட் நிலத்தை, 30 ஆண்டுகளாக, சீனிவாசன், மோகனா என்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அந்த இடத்தில் பல குடியிருப்புகள் வர்த்தக கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றி கையகப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அறநிலையத்துறை சட்டப் பிரிவு, 78-ன் படி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் ஹரிபிரியா, உதவிக் கமிஷனர் கவேனிதா ஆகியோர், வருவாய் அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றியதோடு, கட்டடத்தையும் கையகப்படுத்தி, 'சீல்' வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து