முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார்.  கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் இருந்தபடி தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என புகழாரம் சூட்டினார்.

மேலும் இந்தியா தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். இந்தியாவில் பல கலாச்சாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள் உள்ளன. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது.

ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது. இந்தியாவில் தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்.

சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். விவசாயிகளை தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக, அடிமைகளாக மாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார். விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால்தான் காங்கிரஸ் அவர்கள் பக்கம் நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து